மகாலட்சுமி வாசம் செய்யும் மஞ்சளின் மகிமை
மகாலட்சுமி என அழைக்கப்படும் திருமகள் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார்.
செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.
அந்தவகையில், மகாலட்சுமியின் விருப்பமானதாகவும் அவர் இருப்பிடமாகவும் உள்ள பொருட்களில் முக்கியமானது மஞ்சள்.
திருமணத்தில் ஆசிர்வாதம் செய்யும்பொழுது அட்சதை தூவுவதற்கு பச்சரிசியில் மஞ்சளை தோய்த்து தூவுவார்கள்.
அனைத்து பூஜையிலும் மஞ்சளை பிள்ளையார் போல் செய்து அதில் குங்குமம் வைத்து வணங்குவார்கள்.
சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு செய்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |