நயினாதீவில் ஒன்று திரண்ட பக்தர்கள்.. நாகபூசணி அம்மன் கோவில் பெருவிழா - புகைப்படங்கள்

Report

இன்றைய தினம் நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் இன்று(20) வியாக்கிழமை காலை வசந்த மண்டப பூஜைகளுடன் ஆரம்பமாகியது.

நாகபூசணி அம்மன் கோவில் பெருவிழா

நாகபூசணி அம்மனுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அதன் பின்னர் வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

நாகபூசணி அம்மன் கோவில் பெருவிழா

இதனை தொடர்ந்து மூன்று மூர்த்திகளும் உள்வீதி, வெளி வீதி எழுந்தருளி தனித்தனி தேரிலே ஏறி முத்தேர் பவனியாக இரதோற்சவம் இடம்பெற்றது.

நாகபூசணி அம்மன் கோவில் பெருவிழா

16 தினங்கள் தொடரவுள்ள மஹோற்சவம் 

ஆலய மஹோற்சவம் கடந்த 07ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரதோற்சவமும் நாளை தீர்த்தோற்சவமும் அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் நடைபெற உள்ளது.

நாகபூசணி அம்மன் கோவில் பெருவிழா

எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(23) தெப்போற்சவம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

நாகபூசணி அம்மன் கோவில் பெருவிழா

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US