ஒரே நாளில் சஞ்சரிக்கும் மூன்று கிரகங்கள்- இந்த 3 ராசிகளுக்கும் பண மழை தான்

By Sakthi Raj Sep 03, 2025 07:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரம் பொறுத்த வரையில் ஒன்பது கிரகங்களின் மாற்றங்களை வைத்து தான் பல மாற்றங்கள் நம் வாழ்க்கையில் நடக்கின்றது. அந்த வகையில் செப்டம்பர் 3ஆம் தேதி இன்றைய தினத்தில் மூன்று கிரகங்களின் பெயர்ச்சி நடக்க உள்ளது.

 அதோடு இந்த நாளில் பரிவர்த்தினி ஏகாதசியும் இருப்பதால் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அப்படியாக இந்த 3 கிரகங்களின் சஞ்சாரம் எந்த 3 ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பும் பண மழையும் கொடுக்க போகின்றது என்று பார்ப்போம்.

நாம் எப்பொழுது தான் இதை உணர்ந்து கொள்ள போகிறோம்?

நாம் எப்பொழுது தான் இதை உணர்ந்து கொள்ள போகிறோம்?

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இந்த கிரக மாற்றம் இவர்கள் வாழ்க்கையில் தெளிவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கப் போகிறது. இவர்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி அவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் இருந்தால் அது விலகி சுமூகமான நிலையில் குடும்ப வாழ்க்கை தொடரும். புதிய நட்புகளின் அறிமுகத்தால் இவர்கள் வாழ்கையில் அடுத்த கட்ட பயணத்தை நோக்கி செல்வார்கள்.

கடகம்:

கடக ராசியினருக்கு இந்த மூன்று கிரகத்தின் சஞ்சாரம் இவர்கள் வாழ்க்கையில் சந்தித்து வரும் பொருளாதார சிக்கலை சரி செய்யப் போகிறது. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைய போகிறது. உடல்நிலையில் நல்ல மாற்றமும் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையில் சந்தோசம் அடைவீர்கள்.

மகரம்:

சொத்து விவகாரத்தில் சந்தித்து வரும் பிரச்சினைகள் நல்ல முடிவை பெரும். வங்கியில் கேட்கப்பட்ட பட்ட கடன் உங்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் உறவாகும். நீண்ட நாட்களாக திருமண வரம் தேடுபவர்களுக்கு நல்ல வரமும் குழந்தைக்காக காத்து கொண்டவர்களுக்கு நற்செய்தியம் கிடைக்கும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US