தடைகளை போக்கும் பாம்பாட்டி சித்தர் மந்திரம்

By Sakthi Raj Oct 06, 2024 11:31 AM GMT
Report

பொதுவாக சித்தர்கள் மக்களின் குறை தீர்ப்பவராக இருந்து வருகிறார்கள். அவர்கள் அவர்களுடைய வாழ்நாள் முழுவதையும் ஆன்மீக தேடல் மற்றும் மக்கள் நலனுக்கான மருத்தவம் போன்றவற்றை தேடுதல் மற்றும் ஞானத்தின் அடிப்பைடயில் விட்டு சென்று இருக்கின்றார்கள்.

அப்படியாக சித்தர்கள் பல பேர் வாழ்ந்து மறைந்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சித்தர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் மிக பரிட்சயமானவராக இருக்கிறார்கள்.

அதில் முக்கியமான சித்தர் தான் பாம்பாட்டி சித்தர்.இவர் ராகு கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் மற்றும் மந்திரங்கள் விட்டு சென்று இருக்கிறார்.

பொதுவாக ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு மனதில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகி கொண்டு இருக்கும். அதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய தடைகள் சந்தித்து கொண்டு இருப்பார்கள்.

தடைகளை போக்கும் பாம்பாட்டி சித்தர் மந்திரம் | Sithargal Vazhipaadu

மேலும் ராகு கேது தோஷம் இருந்தால் திருமண தாமதம் திருமண தடை கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமை போகுதல் போன்ற தொந்தரவு இருந்து கொண்டு இருக்கும். அவர்கள் இந்த பாம்பாட்டி சித்தரை மனதார வழிபட அவை நீங்கும்.

மேலும் அவர்கள் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதியை சங்கரன்கோயிலில் சென்று தரிசித்து வரலாம்.அவரை தரிசித்து இந்த மந்திரம் ஜபிக்க முழுமையாக தோஷம் நீங்கும்

செல்வம் நிலைத்து நிற்க செய்யவேண்டிய எளிய பரிகாரம்

செல்வம் நிலைத்து நிற்க செய்யவேண்டிய எளிய பரிகாரம்


 மந்திரம்

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்தியதோ விஷ்னு ரூபினே
அக்ரதோ ருத்ர ரூபாயா விருஷ் ராஜ யதே நம

இந்த மந்திரத்தை மனதார பாம்பாட்டி சித்தரை வழிபட்டு சொல்லி வர வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடப்பதை பார்க்க முடியும்,மேலும் வாழ்க்கையில் ஏற்பட்ட தடங்கல் விலகி சந்தோசம் நிலவும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US