கோவில் வழிபாடுகளில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

By Sakthi Raj May 11, 2024 07:40 PM GMT
Report

கோவில் வழிபாடுகளுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

* நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது பூக்கள் வாங்கி செல்வது வழக்கம். அதை பெரும்பாலும் கடைகளில் வாங்குவதை விட நம் கைகளால் பூக்கள் பறித்து கோர்த்து சமர்ப்பிப்பது நல்லது.

* விநாயகருக்கு தேங்காய் உடைப்பது நல்லது, ஆனால் மற்ற கடவுளுக்கு தேங்காய் உடைத்து அதை தாம்பூலத்தோடு வைத்து கொடுப்பது தான் சிறப்பாகும்

* வில்வ இலை சிவனுக்கு உகந்தது என்று அனைவரும் அறிந்த ஒன்று. அதை காலையில் ஒரு கை அளவு நமசியவா என்று சொல்லி வில்வ இலை சாப்பிட்டு வந்தால் கண் நோய், வயிற்று வலி ஆகியவை தீரும்.

கோவில் வழிபாடுகளில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் | Temple Rules Hanuman

* நாம் நதி ஏறி கரைகளில் நீராடும் போது அருகில் கோவில் இருந்தால் சன்னதியை நோக்கி நின்று குளிக்க வேண்டும். அப்படி செய்வதால் பாவங்கள் நீங்கி கோவிலுக்குள் சென்று தரிசித்து கிடைக்கும் அருள் நமக்கும் கிடைக்கும்.

* நம்முடைய ஞானம் வளர பௌர்ணமி தோறும் குருநாதரை வணங்கி வந்தால் அறிவு பெருகும் என்கிறார்கள்.

* அனுமன் வழிபாட்டுக்கு செவ்வாய், சனி உகந்த நாளாகும். அன்று திருமணம் ஆகாதவர்கள் "ஸ்ரீ ராமா ஜெயம்"கூறி வழிபட்டால் நிச்சயம் திருமணம் நடக்கும். மண வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும்.

கோவில் வழிபாடுகளில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் | Temple Rules Hanuman

* கோவிலுக்கு செல்லும்பொழுது உடன் யாரேனும் வந்தால் அழைத்து செல்லலாம் இல்லை தனியே செல்வது சிறப்பு. ஏனெனில் கூப்பிட்டு அவர் வராமல் போனால் மன கவலையுடன் கோவிலுக்கு செல்வது போல் அமைந்துவிடும்.

* கோவிலுக்கு செல்லும் பொழுது எப்பொழுதும் சந்தோஷமான மன நிலையில் செல்லவேண்டும் அப்பொழுது தான் இறை வழிபாடு திருப்தி தரும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US