திருமணத்திற்கு தேதி குறிக்கும் முன் இந்த 11 விதிகளில் கவனமாக இருங்கள்

By Sakthi Raj Jun 18, 2025 08:58 AM GMT
Report

 திருமணம் என்பது இறைவன் அருளால் எங்கோ பிறந்து அறிமுகம் ஆகாத இரு நபர்கள் இணையும் பந்தம் ஆகும். அவை கட்டாயம் விதியின் வழிகாட்டுதலால் மட்டுமே நடப்பவை என்றாலும், நாமும் திருமணம் செய்யும் முன் குறிப்பிட்ட சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது ஜோதிடத்தில், திருமணம் செய்யும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய 11 விதிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

திருமணத்திற்கு தேதி குறிக்கும் முன் இந்த 11 விதிகளில் கவனமாக இருங்கள் | Things We Should Be Carefull Before Fixing Wedding

1. முதல் விதி:

ஒருவருடைய திருமணம் மல மாதத்தில் நடைபெறக்கூடாது. அதாவது மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வரக்கூடியது ஆகும்.

2. இரண்டாவது விதி:

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர பிற மாதங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

3. மூன்றாவது விதி:

இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.

4. நான்காவது விதி:

திருமணத்தை புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகளில் நடத்துவது சிறப்புடையது. அதாவது, ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.

5. ஐந்தாவது விதி :

துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது நல்லது.

6. ஆறாவது விதி :

ஜோதிடத்தில் குடும்பத்தை குறிக்கும் 7 வது இடம் முகூர்த்த லக்கினத்தில் இருந்து அந்த இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி:

அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

தடைகளை அகற்றும் விரலி மஞ்சள் வழிபாடு- 21 வாரத்தில் நினைத்தது கைகூடி வரும்

தடைகளை அகற்றும் விரலி மஞ்சள் வழிபாடு- 21 வாரத்தில் நினைத்தது கைகூடி வரும்

8. எட்டாவது விதி:

அதே போல், திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி:

திருமண நாள் அன்று மணமக்களுக்கு சந்திராஷ்டமம் தினமாக அமைந்து இருக்கக்கூடாது.

10. பத்தாம் விதி:

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி:

இறுதியாக மணமக்கள் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமணம் செய்யக்கூடாது.

இந்த விதிகளை கொண்டு திருமணம் நடைபெறுவது சிறப்பு என்றாலும், சிலருக்கு இந்த விதிகள் எல்லாம் தாண்டி திருமண நாள் அமையப்பெற்று விடுகிறது. அவர்கள் எதற்கும் பயமும் கொள்ளாமல் குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்து திருமணம் செய்தால் நிச்சயம் குலதெய்வ அருளால் நன்மையே நடக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US