கேட்டதை அருளும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலின் சிறப்புகள்
திருமயம் எனப்படும் திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43-ஆம் திருப்பதியாகும். இது புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல்லவ பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், முத்தரையர் அரசர்களால் குடைவரை கோவிலாக கட்டப்பட்டது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 18 திவ்ய தேசங்களில் ஒன்று இது. திருமங்கை ஆழ்வார் தனியாகச் சென்று மங்களாசாசனம் செய்த 46 தலங்களில் இந்தத் திருமெய்யமும் அடங்குகிறது.
இத்தலத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர் – “சத்திய மூர்த்தி” மற்றும் “திருமெய்யர்”. சைவ-வைணவ ஒற்றுமைக்கு சாட்சி பகரும் வகையில், ஒரே இடத்தில் சத்திய கிரீஸ்வரர் (சிவன்) மற்றும் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன.
தல வரலாறு:
ஒருமுறை, பெருமாள் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயத்தில், மது மற்றும் கைடபர் எனும் இரு அரக்கர்கள், பூதேவி மற்றும் ஸ்ரீதேவியரை கடத்த முயன்றனர். இதனால் பதறிய தேவியர் இருவரும் ஒளிந்து கொண்டனர். பூதேவி பெருமாளின் திருவடியில், ஸ்ரீதேவி மார்பில் தஞ்சமடைந்தனர்.
அப்போது, பெருமாளின் தூக்கத்தை கலைக்காமல் அரக்கர்களை விரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆதிசேஷன், தன் நாக வாய் மூலம் விஷக்காற்றை வெளியேற்றி அரக்கர்களைத் துரத்தினான். கண்விழித்த பெருமாளிடம், "என் செயல் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்குமோ" என அஞ்சிய ஆதிசேஷனை, பெருமாள் மெச்சிப் பாராட்டினார். இதுவே இத்தலத்தின் புராண வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
புராண வரலாறு:
திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலப் பெருமையை நாரதருக்கு சிவபெருமான் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வழிபட்டால், அவர்கள் தரிசிக்கிறவர்களுக்கு கவலை இல்லா மனநிலையும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என உறுதிபடக் கூறப்பட்டுள்ளது.
சத்தியகிரி எனப்படும் இந்த மலை, சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்றும், இங்கு பெருமாள் சத்தியமூனிவருக்கு தரிசனம் தந்ததாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சைவ வைணவ ஒற்றுமை:
திருமெய்யம் மலைக்குன்றின் தெற்குப் பகுதியில், சுமார் அறுபதடி தூர இடைவெளியில் பெருமாள் கோயிலும் சிவன் கோயிலும் ஒரே நேரத்தில் காணக்கூடிய வகையில் அமைந்துள்ளன. இது சைவ வைணவ ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு வாயிலின் வழியாகவே இரு கோவில்களிலும் பிரவேசிக்க முடியும் என்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பு.
தல அமைப்பு:
இக்கோவில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சிறுமலைக் கோட்டையாகும். கோவிலைச் சுற்றி ஏழு சுற்றுச் சுவர் உள்ளது. வட்ட வடிவ கோட்டைக்குள் அமைந்த கோவிலுக்கு வடக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய மூன்று நுழைவுவாயில்கள் உள்ளன. திருமயம் கோவில் ஒரு மலைச்சரிவில் அமைந்த, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கோவிலாகும்.
இது குடைவரைக்கோயிலாகக் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு ஒரு சுற்றுச் சுவர் மட்டுமே இருப்பதால், கோவிலை முழுமையாக சுற்றியோட முடியாது. ஸ்ரீரங்கம் பெருமாள் 64 சதுர்யுகங்களுக்கு முன் தோன்றியவர் என புராணம் கூறுகிறது.
ஆனால் திருமயம் சத்யகிரிநாதன் 96 சதுர்யுகங்களுக்கு முன் தோன்றியவர் என்பதால், இத்தலத்திற்கு "ஆதி ரங்கம்" என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இங்கு சோமச்சந்திர விமானத்தின் கீழ், சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தருளி, ஒரு கரத்தில் சங்கும் மற்றொரு கரத்தில் சக்கரமும் கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
“சத்தியமாக வந்து அருள்புரிகிறேன்” என வாக்குறுதி அளித்ததால் இவருக்கு சத்தியமூர்த்தி என பெயர் வந்தது. மற்றொரு சந்நிதியில், பெருமாள் “திருமெய்யர்” எனும் திருநாமத்துடன், ஆதிசேஷன் பாம்பணையில் பள்ளிகொண்டு யோக நித்திரை காட்சி தருகிறார். இந்த யோகசயன பெருமாளின் திருமேனி இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும்.
அவரது திருநேத்திரங்கள் அரைக்கண் மூடலில் இருக்க, வலக்கரம் ஆதிசேஷனை அணைத்துள்ள நிலையில் அருள்பாலிக்கிறார். மூலவர் சத்யகிரிநாதர், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை செய்கிறார். உற்சவர் பெயர் மெய்யப்பன். தாயார் – உய்யவந்த நாச்சியார். கோவிலின் சுவர்களில் பல சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
இங்கு இருக்கும் யோகசயன பெருமாள் உருவம், திருவரங்கம் அரங்கநாதரைவிடப் பெரியதாகக் கருதப்படுகிறது. இங்கே சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர், நரசிம்மர், லட்சுமி போன்ற சன்னதிகள் உள்ளன.
சக்கரம், சங்கம் கொண்டு எழுந்தருளும் பெருமாளுக்கு பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்கிறார்கள். ராகு, கேது தோஷம், போட்டி, பொறாமை, விஷ நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் நன்மை கிட்டும் என நம்பப்படுகிறது.
தல பெருமைகள்:
மூலவரைச் சுற்றி தேவர்கள், ரிஷிகள், பிரம்மா, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வீகங்கள் உள்ளன. பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை “தைலக்காப்பு” சிறப்பு பூஜையாக நடைபெறும். மது, கைடபர் ஆகிய அரக்கர்களால் ஏற்பட்ட இடரிலிருந்து பூமியையும் தேவர்களையும் காத்த பெருமாளாக இங்கே வணங்கப்படுகிறார்.
இத்தலத் தாயார் “உஜ்ஜீவனத்தாயார்” எனப்படும் ஸ்ரீ உய்யவந்த நாச்சியார். இவரை வழிபட்டால் குழந்தைப்பேறு, பேய் பிசாசு பிரச்சினைகள், மனநிலை பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவர் வீதியில் உலா வராதவர்; கோவிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும்.
சிறப்புக் திருவிழாக்கள்:
வைகாசி பௌர்ணமி தேர் திருவிழா – 10 நாட்கள் நடைபெறும். 5 ஆயிரம் பேர் கலந்துகொள்வர்.
ஆடிபூர திருவிழா – 10 நாள் திருவிழா. வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ்/ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நாட்களில் தரிசனத்துக்கு வருவர். இத்தலம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 97-வது திவ்யதேசமாக கருதப்படுகிறது.
பல்லவர் காலக் கட்டமைப்பில் சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஒரே மலைச்சரிவில் அமைந்த குடைவரைக் கோவில்களாகும். இக்கோவிலில் அருள்புரியும் பெருமாள் "சத்தியமூர்த்தி", "திருமெய்யர்" என இரு திருநாமங்களுடன் பக்தர்களுக்கு கருணை வழங்குகிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |