கண் நோய் தீர்க்கும் என்கண் முருகன் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Jan 28, 2025 06:19 AM GMT
Report

திருவாரூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள என் கண் கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் என் சிவன் கோவில் உள்ளது. அந்த வளாகத்திற்கு உள்ளே தெற்கு நோக்கிய முருகன் சன்னதி உள்ளது.

இவர் இங்கு உற்சவமுரத்தியாக அருள் பாலிக்கின்றார். பிரம்மபுரியின் தலவிருட்சம் வன்னி மரம். இதன் புராணப் பெயர் சமீ வனம். இங்கு உற்சவமூர்த்தி ஆக சுப்பிரமணிய சுவாமியும் மூலவராக பிரம்மபுரீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். பெருமாள் சந்நிதியும் இங்கு உள்ளது. 

கதை 1

என் கண் முருகன் என்று அழைக்கப்படுவதற்குப் புராணக் கதை ஒன்று உள்ளது. சிற்பியைப் பற்றிய கதை சொல்லப்படுகின்றது. ஒரு சிற்பி சிக்கல், எட்டுக்குடி ஆகிய ஊர்களில் செய்த முருகன் சிலைகளைப் பார்த்துத் தானே அவற்றின் அழகில் மயங்கி இனி இதுபோன்ற ஒரு சிலையை நான் செய்யவே கூடாது என்ற முடிவோடு தன் பெருவிரலைத் தானே வெட்டிக் கொண்டார்.

போக பாக்கியமும் புத்ர பாக்கியமும் அருளும் பட்டமங்கலம் குருபகவான்

போக பாக்கியமும் புத்ர பாக்கியமும் அருளும் பட்டமங்கலம் குருபகவான்

தன் கண்களையும் குருடாக்கிக் கொண்டார். அதன் பின்பு அவர் ஒரு முருகன் சிலை செய்ய நேர்ந்தது. அதுவே என் கண் என்ற ஊரில் இருக்கும் முருகன் சிலையாகும். சிற்பி என்கண் முருகன் சிலையைச் செய்யும்போது அவருக்கு ஒரு பெண் உதவியாக இருந்தார்.

சிலை முடித்த பிறகு கண் திறக்கும் நிகழ்ச்சியில் 'எனக்குக் கண் இல்லையே நான் எப்படி முருகனின் கண்ணைத் திறப்பேன்' என்று மனம் வருந்தினார். பதட்டத்தில் தவறுதலாக அவர் உளிச் சிறுமியின் கையில் பட்டு அவள் விரலிலிருந்து ரத்தம் தெறித்தது.

அவ்வாறு தெறித்த இரத்தத் துளி ஒன்று சிற்பியின் கண்ணில் பட்டவுடன் சிற்பி 'ஆ என் கண்' என்று அலறினார். அவருக்குக் கண் பார்வை வந்தது. முருகனுக்கும் கண் திறந்தது. எனவே என் கண் முருகன் கோயில் கண் நோயைக் குணமாக்கும் கோவிலாகும். கண்ணிழந்தோருக்கும் பார்வை வரம் அருளும் திருத்தலம்.

கண் நோய் தீர்க்கும் என்கண் முருகன் கோவில் | Thiruvenkadu Swetharanyeswarar Temple

பிரமபுரீச்வரர்

பிரம்மன் வழிபட்ட சிவன் என்றும் என்பதால் கருவறை நாதர் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இங்கு பிரம்மனே முருகனாக வழிபடப்படுவதால் பிரம்மனுக்கு உரிய 8 கண்கள் என்பதே முருகனுக்கு என் கண் என்று பெயராயிற்று.  

கதை 2
பிரமனுக்கு உபதேசித்த தலம்

ஓம் என்னும் பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனுக்கு முருகன் பிரணவ மந்திரத்தில் உபதேசித்த தலம் இதுவாகும். பிரம்மனை வெற்றி கொண்ட முருகன் பிரம்மனுக்குரிய எட்டு கண்களைத் தனக்குரியனவாக்கிக் கொண்டான்.

ஆறுமுகப் பெருமான்

இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சிக்கல், எட்டுக்குடி, என் கண் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் முருகனுக்கு ஆலயம் கோவில் கட்டிய போது மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகனுக்குச் சிலை வடித்தான். இருபுறமும் தேவியர் இடம்பெற்றனர்.

பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா? திருப்புவனம் சிவபெருமானை தரிசனம் செய்தால் போதும்

பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா? திருப்புவனம் சிவபெருமானை தரிசனம் செய்தால் போதும்

இது போன்ற சிலை குன்றக்குடியிலும் உள்ளது. என் கண் முருகனுக்கு முகங்கள் ஆறும் வரிசையாக இல்லை. முன்னால் மூன்று முகம் பின்னால் மூன்று முகம் என்று உள்ளது. அவர் தன்னுடைய 12 கைகளில் வேல், கம்பு பாசம், கத்தி, சக்கரம், சூலம், வில்லாயுதம், கேடயம், சேவல் கொடி, அங்குசம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றார்.

இவருக்கு இருபுறமும் தேவயானையும் வள்ளியும் தனித்தனியாக உள்ளனர் கண் நோய்க்குச் சிறப்பு வழிபாடு ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தன்று இத்திருத்தலத்தில் உள்ள குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு சண்முகா அர்ச்சனை செய்து வந்தால் தீராத கண் நோயும் தீர்ந்து கண் ஒளி கிட்டும்.

கண் நோய் தீர்க்கும் என்கண் முருகன் கோவில் | Thiruvenkadu Swetharanyeswarar Temple

கதை 3
பூசையில் படைத்த கண் மலர்கள்

திருவீழிமிழலை திருத்தலத்திற்குச் சொல்லப்படும் புராணக் கதையில் ஆயிரம் மலர்களைக் கொண்டு பூசிக்கும் போது இரண்டு மலர்கள் குறைந்ததால் தன் இரண்டு விழிகளையும் மலர்களாக்கி இறைவனைப் பூசித்த கதை ஸ்தலப்புராணக் கதையாக வழங்குகிறது.

இதைப் போலவே என் கண்ணிலும் பிரம்மதேவன் தன்னுடைய தனது நான்கு முகத்திலிருந்து எட்டு கண்களையும் தோண்டி எடுத்து அவற்றை மலர்களைப் போல இறைவனுக்கு அர்ப்பணித்துப் பூசை செய்தான். அதனால் இத்தலம் என்கண் என்று பெயர் பெற்றது.

முருகன் தெற்கு திசை நோக்கி இருப்பதால் ஞானகாரனாகிய தட்சணாமூர்த்தியைப் போலவும் எமனின் திசையை நோக்கி இருக்கும் கால சம்ஹார மூர்த்தியைப் போலவும் பக்தர்களுக்கு பலன் அளிக்கின்றார். கல்வி உயர்வு வேண்டுவோரும் ஆயுள் ஆரோக்கியம் சிறப்படைய வேண்டும் என்று கருதுவோரும் ஆயுள் தோஷம் உள்ளவர்களும் இக்கோவிலுக்கு வந்து தொடர்ந்து முருகனை வழிபட்டு வர நினைத்த காரியம் சித்தியாகும்.

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில்

புண்ணியம் கோடி கொடுக்கும் திருமலை நம்பி திருக்கோவில்

ஒளி வழிபாடு

பங்குனி மாதத்தில் பிரமபுரிஸ்வரர் மீது மூன்று நாட்கள் சூரிய ஒளி தலை முதல் கால் வரைத் தொட்டு தழுவி செல்கின்றது.

பெருமாள் சன்னதி

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தெற்கு நோக்கி முருகன் இருப்பதைப் போலவே தெற்குப் புற வாயிலில் தனிக்கோவிலில் கருவறையில் கருடாழ்வார் மீது அமர்ந்த ஆதிநாராயண பெருமாள் காட்சி தருகின்றார்.

கண் நோய் தீர்க்கும் என்கண் முருகன் கோவில் | Thiruvenkadu Swetharanyeswarar Temple

கதை 4
தைப் பூசத் திருநாள்

சிம்மவர்மன் என்ற மன்னன் சிங்கமுகத்துடன் கம்பீரமாகத் திகழ்ந்தான். ஒருநாள் அவன் தன் ஆணவத்தை அறிவில் சிறந்த பிருகும் முனிவரிடம் காட்டியதால் அவர் அவனுடைய சிங்கமுகம் மறைந்து சாமானியரைப் போல மனித முகம் தோன்றும் என்று சாபமிட்டார்.

தனக்குரிய தனிச்சிறப்பு மறைந்து போனதைக் கண்ட சிம்மவர்மன் மிகுந்த வேதனையுடன் என் கண்ணுக்கு வந்து ஒட்டாற்றில்/ விருத்த காவிரியில் நீராடி தினமும் முருகப்பெருமானை வழிபட்டு வந்தான். இவனுடைய கடும் தவத்தைக் கண்டு மெச்சிய முருகப்பெருமான் இவன் தவத்தில் மகிழ்ந்து தைப்பூசத்தன்று மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் சிம்மவர்மனுக்குக் காட்சியளித்தார். அத் திருக்காட்சியைக் கண்டதும் மனித முகம் மறைந்தது. பழைய சிங்க முகம் அவனுக்குத் திரும்பக் கிடைத்தது. 

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

சிறப்பு வழிபாடுகள்

தைப்பூசத் திருநாள் என் கண் கோவிலில் சிறப்பாக நடைபெறும். 14 நாட்களுக்கு பிரம்மோற்சவம் கோலாகலமாக நடக்கும். தேரோட்டமும் உண்டு.

ஐப்பசி மாதம் கந்த சஷ்டி எட்டு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி கார்த்திகை, தை மற்றும் மாசி மாதக் கார்த்திகை மற்றும் மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களிலும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. 

கோவில் முன் வரலாறு

என் கண் கோவிலின் முன் வரலாற்றை ஆராயும்போது பின்வரும் நிலை தெளிவாகின்றது. இக்கோயில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட இந்திரன் கோவிலாக இருக்கக்கூடும். ஏனெனில் இந்திரனுக்கும் லிங்க உருவம் வைத்து வழிபடும் முறை இருந்தது.

எனவே பிரம்மதேவன் வழிபட்ட இந்திரனாகிய லிங்கம் அவர்கள் காலத்திற்குப் பின்பு பிரம்மதேவன் வழிபட்ட கடவுள் என்ற பொருளில் பிரம்மபுரீஸ்வரனாக மாறியுள்ளது.அக்காலகட்டத்தில் பிரம்மனுக்கும் பௌத்தர்கள் பிரம்ம விகாரை என்ற பெயரில் தனிக்கோயில் எழுப்பி வணங்கி வந்தனர். பிரமன் நினைவில் இத்தலம் என் கண் என்று அழைக்கப்பட்டு பிரமதேவன் தோற்ற கதை உருவாகியது.

கண் நோய் தீர்க்கும் என்கண் முருகன் கோவில் | Thiruvenkadu Swetharanyeswarar Temple

முருகனுடைய பெயர் என் கண் என்றானது. பிரம்மதேவன் கோயில் இருந்த இடத்தில் முருக பெருமானுக்குக் கோயில் கட்டியிருக்கலாம். பிரம்மதேவன் கோவில் முருகன் கோவிலாக மாறிய இடங்களில் எல்லாம் பிரம்ம தேவனுக்கு ஓங்காரத்தின் பொருள் தெரியாத கதை சொல்லப்படுகின்றது. சிவன் கோயில்களில் அடி முடி தேடிய கதை சொல்லப்படுகிறது.

பௌத்த  கடவுளரான இந்திரனை போகி என்றும் பிரம்மனை பொய்யான என்றும் தாரா தேவியை தோற்றுப்போன காளி என்றும் பல கதைகள் உருவாயின. சங்க காலத்துக்கும் முந்திய ஒளி வழிபாடு பௌத்தர் காலத்தில் சூரிய ஒளி வழிபாடு, சந்திர ஒளி வழிபாடு என்ற பெயர்களில் பின்பற்றப்பட்டது. இவை பின்னர் சிவனை சூரிய சந்திரர் வழிபட்ட தலங்கள் என்று பெயர் மாறின.

பௌத்தக் கடவுளான அமோக சித்தி கோயிலில் அவர் கருட வாகனத்தில் ஏறி காட்சி தருவார். பௌத்த சமயத்தில் கருடன் வடக்கு திசையில் காவலன். ஞானத்தின் அடையாளம். தங்க சிறகுடைய பறவை (Bird with Golden wings).

இவ்வாறு என்கண் தலத்தில் உள்ள பல சமயக்கூறுகள் இத்தலம் பழைய பௌத்தத் திருத்தலம் என்பதைச் சுட்டுகின்றன. சைவ வைணவ எழுச்சிக்குப் பிறகு காலாவதியாகி போன சமண, பௌத்தக் கோயில்கள் சிவன் விஷ்ணு கோயில்களாக மாறிவிட்டன.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.














 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US