திருச்செந்தூர் முருகன் கோவிலின் உண்டியல் காணிக்கை: எத்தனை கோடி தெரியுமா?
முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் சிறப்புப் பெற்ற தலமாக திருச்செந்தூர் விளங்குகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்படி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தங்கம் 2 கிலோ 352 கிராமும், வெள்ளி 41 கிலோ 998 கிராமும், 1,589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேலும் கோவில் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 1,67,860 ரூபாயும், கோசாலை பராமரிப்புக்காக 82, 722 ரூபாயும் வருமானமாக கிடைத்தது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |