வாஸ்து: வீடுகளில் எந்த சிலை வைப்பதால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
நம் வீடுகளில் வாஸ்து ரீதியாக சில பொருட்களை வாங்கி வைப்பதால் நமக்கு அதிர்ஷ்டமும் வீடுகளில் உள்ள எதிர்மறை ஆற்றலும் விலகும் என்கிறார்கள். அப்படியாக, வாஸ்து ரீதியாக வீடுகளில் எந்த சிலை வைப்பதனால் என்ன பலன் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
குபேரன் சிலை:
குபேரன் சிலை மிகவும் அதிர்ஷ்டமானதாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் நாம் குபேரன் சிலை வைக்கும் பொழுது பொருளாதார வளர்ச்சியும், பணவரவில் ஏற்பட்ட சிக்கல்களும் விலகும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் வீட்டில் குபேரன் சிலை வைக்கும் பொழுது வடக்கே பார்த்து வைக்க வேண்டும்.
மீன் சிலை:
வீடுகளில் மீன் சிலை வைப்பது வாஸ்துவால் உண்டான தோஷத்தை போக்குகிறது. சிலர் வீடுகளில் காரணமே இல்லாமல் எதிர்மறை ஆற்றல் சூழந்து இருப்பதை பார்க்கமுடியும். அவர்கள் கட்டாயம் வீடுகளில் மீன் சிலை வைக்கலாம்.
கண் திருஷ்டி விநாயகர்:
மனிதனை மிகவும் தாக்கக்கூடிய சக்தியாக இந்த கண் திருஷ்டி உள்ளது. அவ்வாறு உருவாகும் கண்திருஷ்டி விலக வீடுகளில் கண் திருஷ்டி விநாயகர் வைக்கலாம். இவை நம்மை நெருங்கும் கண்திருஷ்டியில் இருந்து காக்கிறது.
காமதேனு சிலை:
வீட்டில் வற்றாத செல்வம் சேர வீடுகளில் காமதேனு சிலைகளை வைக்கலாம். இதை வியாபாரம் செய்யும் இடங்களில் வைப்பதும் சிறந்த பலனைக்கொடுக்கும்.
யானை சிலை:
யானை சிலையை வீடுகளில் வைக்கும் பொழுது வீடுகளை சூழும் பெரும் ஆபத்துகள் விலகி, வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
கிளி:
வீடுகளில் கிளி வைக்கும் பொழுது தெய்வ கடாட்சம் பெருகும். அதோடு இறையருளால் நன்மை உண்டாகும்.
பூரண கும்பம்:
வீடுகளில் பூரண கும்பம் வைக்கும் பொழுது ஐஸ்வரியங்கள் பெருகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை: வீடுகளில் தலையாட்டி பொம்மை வைக்கும் பொழுது குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி மனநிம்மதி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |