கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனையா? இந்த ஒரு விஷயத்தை செய்து பாருங்கள்

By Sakthi Raj Jun 27, 2025 08:25 AM GMT
Report

  கணவன் மனைவி என்ற பந்தம் மிக மிக புனிதமான உறவு ஆகும். அப்படியாக, அதில் அன்பு, பிணைப்பு இவை எல்லாம் இருந்தாலும் சண்டை வருவது இயல்பான ஒன்று தான். மேலும், இந்த சண்டை அவர்களுக்கு இடையே இருக்கின்ற பாசத்தை அதிகரிக்கத்தான் செய்யும்.

இருந்தாலும் சிலர் வீடுகளில் இந்த கணவன் மனைவி இடையே உள்ள சண்டைகள் பெரிய அளவில் சமாதானம் ஆகாமல் செல்வதை நாம் காணமுடியும். அதற்கு சமயங்களில் வாஸ்துவும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். அப்படியாக, காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை போடும் கணவன் மனைவி வீடுகளில் மாற்ற வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி பார்ப்போம்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனையா? இந்த ஒரு விஷயத்தை செய்து பாருங்கள் | Vastu Tips For Husband And Wife In Tamil

கணவன் மனைவியின் படுக்கை அறை தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பது கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியும், இனிமையான உறவையும் கொண்டு வருகிறது.

ஆனால், படுக்கை அறை வடகிழக்கு திசையில் இருந்தால் அவை கணவன் மனைவி இடையே நிம்மதியின்மை மற்றும் சந்தேகத்தை உருவாக்கும்.

ருத்ராட்சம் அணிந்த பிறகு அதை அடிக்கடி கழட்டி வைக்கலாமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

ருத்ராட்சம் அணிந்த பிறகு அதை அடிக்கடி கழட்டி வைக்கலாமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

மேலும், வாஸ்து சாஸ்திரப்படி மிக முக்கியமாக படுக்கை அறையில் தனிமை வெளிப்படுத்தும் புகைப்படங்களோ அல்லது சண்டையிட்டு கொள்வது உள்ள புகைப்படத்தையோ வைக்க கூடாது. இது உறவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

முடிந்த வரை கணவன் மனைவி இருவரும் உறங்க செல்லும் முன் தலைக்கு அருகில் தண்ணீர் வைத்துக்கொள்வது மிக சிறந்த பலனைக்கொடுக்கும். பிறகு மறுநாள் காலையில் அந்த தண்ணீரை கொண்டு செடிகளுக்கு விட்டு வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US