உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்-ரிஷபம்

By Sakthi Raj Jun 20, 2024 11:00 AM GMT
Report

நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்-ரிஷபம் | Ungal Pirantha Natchathira Thevaram Rishabam News

கார்த்திகை/கிருத்திகை

செல்வியைப் பாகம் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்

மல்லிகைக் கண்ணியோடு

மாமலர்க் கொன்றை சூடிக்

கல்வியைக் கரை இலாத

காஞ்சி மாநகர் தன்னுள்ளார்

எல்லிய விளங்க நின்றார்

இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி

எங்கேனும் இருந்து உன்

அடியேன் உனை நினைந்தால்

அங்கே வந்து என்னோடும்

உடன் ஆகி நின்றருளி

இங்கே என் வினையை

அறுத்திட்டு எனை ஆளும்

கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.

முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் அனுமனின் சிற்பம்

முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் அனுமனின் சிற்பம்


மிருக சீரிடம்

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி

என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி

கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US