ஒவ்வொரு ராசியினர் ஒவ்வொரு குணத்துடன் இருக்கும் நிலையில் யாருக்குமே பிடிக்காமல் இருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசியினர்கள் வித்தியாசமான குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் சில ராசியினருக்கு மட்டும் அவர்கள் என்ன செய்தால் மற்றவர்களுக்கு பிடிக்காமலேயே இருக்கும். அந்த வகையில் எந்ததெந்த ராசியினர் யாருக்குமே பிடிக்காமல் இருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினர் நடந்து கொள்வது, சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் எரிச்சலூட்டும் விதமாகவே இருக்குமாம். இவர்களின் மனநிலை இரட்டை ஆளுமையால் மாறிக்கொண்டு இருப்பதால், மற்றவர்களை குழப்பமடையச் செய்யவும், எரிச்சலடையவும் செய்யும்.
இவர்களின் அவசர முடிவு மற்றும் கோபத்தினால் சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாகவும், வாக்குவாதமாகவும் மாறிவிடுமாம்.
சிம்மம்
சிம்ம ராசியினர்கள் தங்களது அளவில்லாத ஆற்றலாலும், வலுமான தன்னம்பிக்கை காரணமாகவும் மற்றவர்களுக்கு இவர்களை பிடிக்காதாம். ஏனெனில் மற்றவர்களுக்கு இவர்களது குணம் திமிராகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் தோன்றும் என்பது தான் காரணம்.
சிறிய விடயத்திற்கும் மிகப்பெரிய அளவில் பாராட்டை எதிர்பார்க்கும் இவர்களின் தற்பெருமை மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். மேலும் இவர்களின் ஆணவம் இவர்களின் மிகப்பெரிய எதிரியாகவே இருக்கும்.
கடகம்
கடக ராசியினர்கள் அனைவர் மீது அன்பு மற்றும் அக்கறை செலுத்துபவர்களாக இருந்தாலும், அனைத்து விடயங்களையும் பர்சனலாகவே எடுத்துக் கொள்வார்களாம். இந்த குணமே மற்றவர்கள் இவர்கள் மீது வெறுப்படைய காரணமாக இருக்கின்றது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமானவர்களாகவும், தீவிரமானவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் மற்றவர்களை தங்கள் இயல்புக்கு ஏற்ப ஆட்டிவைக்கும் திறமை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள், இது மற்றவர்கள் அவர்களை நம்புவதை கடினமாக்குகிறது.
அவர்களின் புத்திக்கூர்மை அவர்களை கையாள்வதில் திறமையானவர்களாக மாற்றக்கூடும். விருச்சிக ராசிக்காரர்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள், இது அனைவரையும் எரிச்சலடைய வைக்கும்.
அவர்களின் பதற்றமான ஆளுமை அணைவருக்கும் அசௌகரியத்தை உருவாக்கி, மோதல்கள் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |