உண்மையான பக்திக்கு வேத மந்திரங்கள் தேவை இல்லை
உண்மையான பக்திக்கு எந்த வித அறிவும் பணமும் தேவை இல்லை.உணர்தல் மற்றும் நல்ல மனம் அதுவே போதுமானது.
அப்படியாக ஒரு முறை ரமணமகரிஷி அவர்கள் திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்.
முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்கம் விவாதிப்பார்கள் ரமணருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர்,இவர்களுடைய விவாதத்தை பார்த்துக்கொண்டு இருப்பார்.
பார்ப்பது மட்டும் அல்லாமல் மனம் வருந்துவதும் உண்டு.அதாவது இந்த வேதவிற்பன்னர்களைப் போல நம்மால் பேச முடியவில்லையே,விவாதிக்க முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என அவர் மனம் வருந்துவதுண்டு.
அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர். ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது, ராமநமஹரிஷி அந்த பக்தரை பார்த்து இன்று சவரம் செய்து கொண்டாயா? எனக் கேட்டார்.
அவர் ஏதும் புரியாமல், ஆமாம் சுவாமி என்றார். கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?'' என்று திரும்பவும் கேட்டார் ரமணர். பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல், ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார்.
கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது.
ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?' என்றார் ரமணரிடம், முடியாது சுவாமி, என்றார் பக்தர்.
அதேபோல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும் அவ்வளவு தான்.
அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும்.
அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார். ஆக நல்ல மனதோடு இறைவனை வணங்குவதும்,பிற உயிர்களை சமமாக நடத்துவதும் பண்பு பாசம் இவ்வை எல்லாம் மனதில் குடி கொள்ள இறைவனை நாம் சுலபமாக அடையலாம்.
அன்பும் நல்ல மனம் மட்டுமே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் நம்மை காப்பாற்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |